விண்ணில் வெளியாய் திகழும்
கண்ணில் ஒளியாய் மிளிரும்
என்னுள் இயல்பாய் நிகழும்
தன்னுள் தானடங்கி வாழும்
நானறிந்த நீயும் என்னில்
நீயறிந்த நானும் வேறல்ல
சேயறிந்த தாயும் தனில்
தானறிந்த சேயும் வேறல்ல
உடலும் உயிரும் உறைவதுபோல
கடலும் கரையும் இணைவதுபோல
மலரும் மனமும் திகழ்வதுபோல
தாயும் சேயும் வேறுவேறல்ல
Sunday, April 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment