எனக்கு கேட்கத்தான் தெரியும்;
வாயினால் அல்ல, செவிகளால் தான்;
பதில் என்னிடமே உள்ளது;
கேள்வியும் பதிலும் இறையருள் தானே!
எனக்கு பார்க்கத்தான் தெரியும்;
விழிகளால் அல்ல; உள்ளுணர்வால் தான்;
காட்சி என்னிடமே உள்ளது;
காட்சியும் சாட்சியும் இறையருள் தானே!
எனக்கு வழிபடத்தான் தெரியும்;
மொழிகளால் அல்ல; மெய்யுணர்வால் தான்
வழிபடு என்று என்னை வழிபடுத்துவதே
என்னுள் உறையும் இறையருள் தானே!
கேள்வி என்பது பதிலின் விதையாகும்;
பார்வை என்பது அறிவின் நிலையாகும் ;
இயற்கை என்பது இறைவடிவாகும்;
இறையருள் ஒன்றே ஈடில்லா பதிலாகும்!
Monday, April 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment