விஞ்ஞானம் மனம் சார்ந்தது அல்ல
மனதை விஞ்சி நின்ற ஞானம்
மனம் கடந்த நிலை; அறிவே ஆதாரம்
மெய்ஞானம் என்றால் உண்மை அறிவு
மனம் மொழி மதம் கடந்த அறிவு
தன்னை அறிவது; தன் இருப்பை அறிவது;
உண்மை அறிவது உயிரை அறிவது
உள்ளதை உள்ளவாறே உணர்வது அறிவு!
கண்டுபிடிப்பு என்றால் கண்களால் அல்ல
கேள்விகளால் விளங்கும் செவிகளால் அல்ல
புலப்படும் ஆனால் புலன்களால் அல்ல
அறிவை கொண்டு எதையும் அறிவதே ஞானம்
விந்தைமிகு இஞ்ஞானம் தன்னை
எந்தையர் ஆயிரம் அறிஞர்கள்
அறிந்தனர், அறிந்ததை அறிந்தவாறே
ஈந்தனர் நமக்கு; அதுவே மெய்ஞானம்!
Sunday, April 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment