Sunday, April 20, 2008

இறையருள்

பூத்த தெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்த தெல்லாம் பழுப்பது இல்லை
பழுத்த தெல்லாம் விழுவதில்லை
விழுந்த தெல்லாம் விளைவதில்லை
விழுந்த தெல்லாம் பூத்திடவேண்டும்
பூத்த தெல்லாம் காய்த்திடவேண்டும்
காய்த்த தெல்லாம் கனிந்திடவேண்டும்
கனிந்ததெல்லாம் பயனுரவேண்டும்
பூக்கும்போது ஒரு நறுமணம்
காய்க்கும்போது ஒரு வாசம்
பழுக்கும்போது ஒரு நிறைகுணம்
முழுமையடைய இறையருள் வேண்டும்
தன்குணம் தான் அறியாது
தன்னை கொடுத்து தானும் வாழும்
இயற்கையின் நிலையில் நானும்
இயல்பாய் வாழ இறையருள் வேண்டும்
விண்ணில் உலவும் நிலவின் குளிரும்
மண்ணில் மலரும் மலரின் மணமும்
தன்னில் இயல்பாய் கண்ணில் கனிவும்
என்னில் பெறவே இறையருள் வேண்டும்

No comments: