Monday, April 21, 2008

திருவருள்

உண்மை இது; நன்மை இது; உயர்ந்தவர்கள்
கண்ட உலகமிது; மண்புலம்
தழைக்க, தென்னவர் உரைத்த
உன்னத ஞான உலகமிது!


விண்ணில் வெளியாய் திகழும்;
கண்ணில் ஒளியாய் மிளிரும்;
மண்ணில் உயிராய் உலவும்;
என்னில் இயல்பாய் விளங்கும்!

நானறிந்த நானும், என்னை
நீயறிந்த நானும் ஒன்றல்ல;
என்ற உண்மையை நீ உணர்ந்தால்
உன்னிலை தானே உயரும்!

அன்று நானும் நீயும் வேறல்ல;
என்று என்னை அறிய எனக்கருள்
செய்த குருவை மறவேன் குருவருள்
பெறுவேன் பெருநிலை அடைவேன்.

No comments: