வைகறைக் காலையில் விலகிடும் இருளில்
மையலின் மாலையில் கலந்திடும் இருளில்
மௌனமே மொழியாய் மயங்கிய நிலையில்
மலர்ந்திடும் ஒளியே; வளர்ந்திடும் கலையே!
உன்னை என்னென்பேன்?
எண்ணில் கண் என்பேன்
பெண் என்பேன்; பெருநிலைஎன்பேன்
உன்னில் கலந்தேன்; உயிரில் உணர்ந்தேன்
விண்ணில் பறந்தேன்; வெளியில் கலந்தேன்;
உண்மை உணர்ந்தேன்; என்னை மறந்தேன்
இருளும் ஒளியும் இறையென அறிந்தேன்;
பெருநிலை புரிந்தேன் பேரின்பம் அடைந்தேன்
Sunday, April 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment