Sunday, April 20, 2008

மொழி

மௌனம் என்பது மொழியாகும்;
ஞானம் அதன் வழியாகும்;
விழிவழி மொழிவது எழிலாகும்;
செவிவழி அறிவது இயல்பாகும்.

பாடும் குயிலும் ஆடும் மயிலும்
பேசும் கிளியும் ஓடும் மானும்
கரையும் காகமும் விரையும் மேகமும்
கூறும் குறிப்பும் மொழியாகும்!

கண்களால் கான முடியாதவற்கு
புள்ளிகளால் ஆன ப்ரைல்லி மொழியாகும்
காதுகளால் கேட்க இயலாதவற்கு
விரலசைவில் செய்கை ஒரு மொழியாகும்!

முந்தையர் ஆயிரம் தந்திரம்
சொன்னதும் மந்திரம் என்னும் மொழியாலே
சிந்தையில் பிறந்ததை சொற்களில்
தந்ததும் விந்தைமிகு மொழியாலே!

இரவின் மொழி இருளாகும்
பகலின் மொழி ஒளியாகும்
இயல்பின் மொழி ஒலியாகும்
உயரின் மொழி உறவாகும்!

இசையும் நடனமும் மொழியாகும்
இரண்டும் சேர்ந்தது கலையாகும்
உணர்வே இன்ப மொழியாகும்
இதுவே தெய்வ நிலையாகும்.

No comments: