Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Sunday, April 20, 2008

மொழி

மௌனம் என்பது மொழியாகும்;
ஞானம் அதன் வழியாகும்;
விழிவழி மொழிவது எழிலாகும்;
செவிவழி அறிவது இயல்பாகும்.

பாடும் குயிலும் ஆடும் மயிலும்
பேசும் கிளியும் ஓடும் மானும்
கரையும் காகமும் விரையும் மேகமும்
கூறும் குறிப்பும் மொழியாகும்!

கண்களால் கான முடியாதவற்கு
புள்ளிகளால் ஆன ப்ரைல்லி மொழியாகும்
காதுகளால் கேட்க இயலாதவற்கு
விரலசைவில் செய்கை ஒரு மொழியாகும்!

முந்தையர் ஆயிரம் தந்திரம்
சொன்னதும் மந்திரம் என்னும் மொழியாலே
சிந்தையில் பிறந்ததை சொற்களில்
தந்ததும் விந்தைமிகு மொழியாலே!

இரவின் மொழி இருளாகும்
பகலின் மொழி ஒளியாகும்
இயல்பின் மொழி ஒலியாகும்
உயரின் மொழி உறவாகும்!

இசையும் நடனமும் மொழியாகும்
இரண்டும் சேர்ந்தது கலையாகும்
உணர்வே இன்ப மொழியாகும்
இதுவே தெய்வ நிலையாகும்.

இயற்கையின் எழில்

நீலவானம்; பச்சை பூமி
நெடிய மரங்கள்; உயர்ந்த மலைகள்
சிவந்த கனிகள் வண்ணமலர்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
எழுகின்ற சூரியன்; விழுகின்ற அருவி
குளிர்ந்த நிலவு தென்றல் காற்று
ஓடும் நதியில் நீந்தும் மீன்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
விண்ணில் பறக்கும் வண்ண பறவை
என்னில் தோன்றும் இன்ப ஊற்று
விழி விரிந்து மொழி மறந்தேன்
என்னை இழந்தேன் இயற்கை எழிலில்.
உறவினைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
இறைவனைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்

இறையருள்

பூத்த தெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்த தெல்லாம் பழுப்பது இல்லை
பழுத்த தெல்லாம் விழுவதில்லை
விழுந்த தெல்லாம் விளைவதில்லை
விழுந்த தெல்லாம் பூத்திடவேண்டும்
பூத்த தெல்லாம் காய்த்திடவேண்டும்
காய்த்த தெல்லாம் கனிந்திடவேண்டும்
கனிந்ததெல்லாம் பயனுரவேண்டும்
பூக்கும்போது ஒரு நறுமணம்
காய்க்கும்போது ஒரு வாசம்
பழுக்கும்போது ஒரு நிறைகுணம்
முழுமையடைய இறையருள் வேண்டும்
தன்குணம் தான் அறியாது
தன்னை கொடுத்து தானும் வாழும்
இயற்கையின் நிலையில் நானும்
இயல்பாய் வாழ இறையருள் வேண்டும்
விண்ணில் உலவும் நிலவின் குளிரும்
மண்ணில் மலரும் மலரின் மணமும்
தன்னில் இயல்பாய் கண்ணில் கனிவும்
என்னில் பெறவே இறையருள் வேண்டும்