Sunday, April 20, 2008

இயற்கையின் எழில்

நீலவானம்; பச்சை பூமி
நெடிய மரங்கள்; உயர்ந்த மலைகள்
சிவந்த கனிகள் வண்ணமலர்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
எழுகின்ற சூரியன்; விழுகின்ற அருவி
குளிர்ந்த நிலவு தென்றல் காற்று
ஓடும் நதியில் நீந்தும் மீன்கள்
என்னை அழைக்கும் இயற்கை எழில்கள்
விண்ணில் பறக்கும் வண்ண பறவை
என்னில் தோன்றும் இன்ப ஊற்று
விழி விரிந்து மொழி மறந்தேன்
என்னை இழந்தேன் இயற்கை எழிலில்.
உறவினைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
இறைவனைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்

No comments: