Wednesday, July 23, 2008

இறை நிலை

கல் கரைந்தால் மண்ணாகும் அந்த
மண்ணில் ஒரு வாசம் வீசும்
காய் கனிந்தால் பழமாகும் அந்த
பழத்தில் புது சுவை கூடும்

மொட்டவிழ்ந்தால் மலராகும் அந்த
மலரில் நறுமணம் பரவும்
பிறை வளர்ந்தால் முழு நிலவாகும் அந்த
நிலவில் ஒளி குளிர் கூடும்

மண்ணில் பொழிந்த மழையும்
மரத்தில் பழுத்த பழமும்
செடியில் பூத மலரும்
விடியலில் எழுகின்ற சூரியனும்

விண்ணில் தவழும் நிலவும்
பண்ணில் காசயும் இசையும்
என்னில் ஊரும் கவியும்
இறை நிலை இவைஎன்று அறிந்தேன்.

No comments: