தவறென்று நினைத்த தெல்லாம்
சரியாக மலர்ந்தது ; நாம்
சரிஎன்று கணித்த தெல்லாம்
தவறாக மாறி விளைந்தது !
தவறெல்லாம் சரியானது; சரிஎல்லாம்
தவறானது ; தவறென்றும் சரிஎன்றும்
சரியாக கணிப்பதற்கு முறையான
தவம் முழுதாக வேண்டும் !
எளிதென்று நினைத்த தெல்லாம்
அரிதானது ; அரிதென்று மலைத்த
தெல்லாம் எளிதானது ;எளியது
அரிதானது ; அரியது எளிதானது !
எளியதும் அரியதும் புலன்கள்
அறியா புதிரானது ; புரியாத்
புதிரெல்லாம் புலனாவதற்கு
முறையான தவம் முழுதாக வேண்டும் !
உறவென்று நினைத்த தெல்லாம்
பகையானது ;பகைஎன்று வெறுத்த
தெல்லாம் உறவானது ; உறவு
பகையானது ;பகை உறவானது ;
உறவும் பகையும் உணர்வானது;
உறவும் பகையும் வாழ்வில்
சரியாய் உணர , முறையான
தவம் முழுதாக வேண்டும்!
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nice one..
Post a Comment