பிறப்பும் இறப்பும் புதிர் என்பார் புரியாதோர்;
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள,
பிறப்பே இறப்பின் மறு வடிவம் என்றாகும் ;
பிறப்பின் சிறப்பே இறப்பென்று விளங்கும் !
விதை அழிந்தால் செடி முளைக்கும் ;
இலை யுதிர்ந்தால் பூ பூக்கும் ;
பூவினுக்குள்ளே காய் இருக்கும்;
காய் அழுகிட கனி யாகும் ;
நிகழ்ந்ததை மறந்து நிகழ்தலில் மகிழ்வோம் ;
மகிழ்தலும் புகழ்தலும் இயல்பென்றிருப்போம்;
இயல்பே இறைஎன்ற உண்மையை உணர்வோம்;
உணர்வே உண்மையென்ற தன்மையை பெறுவோம்;
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment