Wednesday, July 23, 2008

மரம்

வேரில் உண்டு இலையில் சிரிக்கும்
ஊனில் கலந்து உயிராய் திகழும்
தேரில் இணைந்து கலையாய் மிளிரும்
நீரில் மிதந்து படகாய் காக்கும்.

நீர் கொடுக்க நிழல் கொடுக்கும்
யார் பசிக்கும் கனி கொடுக்கும்
வாழும் பொழுது மரமாய் நிற்கும்
வீழ்ந்த பின்னும் துணையாய் தொடரும்.

தன்னில் பழுத்த பழங்களை
தான் உண்பது இல்லை
தன்னில் படர்ந்த நிழலில்
தான் அமர் வதும் இல்லை.

மேலென்று கீழென்று ஏதுமில்லை
உயர்வென்று தழ்வேன்ற நிலையுமில்லை
சூதும் வாதும் புரிவதுமில்லை
பேதம் அறியாது பிரிவும் உணராது .

No comments: