காதலர்களை உலகமே காதலிக்கும்
அவர்தம் பெற்றோர்களை தவிர
கற்றாரை கற்றோர் காமுறுவர்
அவர்தம் உற்றாரை தவிர
வைகையில் வெள்ளம் புரண்டாலும்
ஆற்றோரம் குடிஇருப்போர் அல்லலுறுவர்
தாமரையில் வண்டு வந்து தேன்குடிக்கும்
இலையில் இருக்கும் மண்டூகம் அறியுமோ தேன்சுவையை
நிழலுக்கு கிடையாது நினைக்கும் தன்மை
விழலுக்கு விளங்காது நீரின் அருமை
தழலுக்கு தெரியாது உயரின் உண்மை
கழலுக்கு புரியாது கால்களின் பெருமை
அடர்ந்து படர்ந்து நிறைந்து நிற்கும்
உள்ளம் கடந்து உயிராய் விளங்கும்
கதிரும் நிலவும் கண்களாய் ஒளிரும்
இறை பெருமை யார்தான் அறிவாரோ!
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்படி ஒரு தலைப்பில் யாராவது எழுதி இருப்பார்களா என்று சந்தேகத்துடன் தேடினேன்.
/// இறை பெருமை யார்தான் அறிவாரோ! ///
உங்களுடைய இந்த வரிகள் பொன்னானது.
Post a Comment