நடக்கணும் என்றால் நடந்தே தீரும்
பிறக்கணும் என்றால் பிறந்தே தீரும்
நடப்பதை எவரும் தடுப்பது கடினம்
பிறப்பதை எவரும் தவிர்ப்பது கடினம்.
நடந்ததை ஏற்றலும் பிறந்ததை போற்றலும்
கடந்ததை மறத்தலும் சிறந்ததை நினைத்தலும்
நிகழ்தலில் இருத்தலும் இருத்தலில் மகிழ்தலும்
இயற்கையின் நியதி இதுவென உணர்க.
ஆக்கமும் ஊக்கமும் உயர்ந்தோர் மாண்பது
போற்றலும் புகழுதலும் புண்ணியர் இயல்பு
மாற்றமும் மயக்கமும் மனதின் இயல்பு
தோற்றமும் மறைவும் இயற்கையின் நியதி.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment