கற்பனைக்கு எட்டாதது கைகளில் சிக்காதது
அற்பர்களின் அறிவுக்கு அகப்படாதது
அற்புதங்களுக்கு எல்லாம் ஆதார நிலையது
பொற்பதம் அளித்து பூரிக்க வைப்பது
மனம் கடந்து மயங்கிய நிலையில்
இனம் கண்டு இன்பம் அளிப்பது
உணர்வுகளுக்கு எல்லாம் ஊற்று கண்ணது
உண்மையை உணர்ந்த உன்னத நிலையது
புதிராய் தெரியும் புலன்களை மயக்கும்
கதிராய் ஒளிரும் நிலவாய் குளிரும்
எளிதாய் இருக்கும் இயல்பாய் திகழும்
இறையென அறிந்தால் இன்பம் பெருகும்
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment