Wednesday, July 23, 2008

இறை புதிர்

கற்பனைக்கு எட்டாதது கைகளில் சிக்காதது
அற்பர்களின் அறிவுக்கு அகப்படாதது
அற்புதங்களுக்கு எல்லாம் ஆதார நிலையது
பொற்பதம் அளித்து பூரிக்க வைப்பது

மனம் கடந்து மயங்கிய நிலையில்
இனம் கண்டு இன்பம் அளிப்பது
உணர்வுகளுக்கு எல்லாம் ஊற்று கண்ணது
உண்மையை உணர்ந்த உன்னத நிலையது

புதிராய் தெரியும் புலன்களை மயக்கும்
கதிராய் ஒளிரும் நிலவாய் குளிரும்
எளிதாய் இருக்கும் இயல்பாய் திகழும்
இறையென அறிந்தால் இன்பம் பெருகும்

No comments: