Thursday, May 22, 2008

இறையுணர்வு

உண்ணும் போது உன்னை நினைத்தேன்
உணவின் பயனாய் உடலானை
என்னும் போதும் உன்னை நினைத்தேன்
எண்ணிய பயனாய் அறிவானாய்

பருகும் போது உன்னை நினைத்தேன்
நீரின் பயனாய் உயிரானாய்
துயிலும் போது உன்னை நினைத்தேன்
துயின்ற நிலையிலும் உணர்வானாய்

உடலும் அறிவும் உயிருடன் கலந்த
உன்னத நிலையில் என்னை கண்டேன்
இறையுணர்வென்ற உண்மை உணர்ந்தேன்
நிறைநிலை என்ற திருவருள் பெற்றேன்

கண்ணில் காணாத செவியில் கேளாத
விண்ணின் ஒளியை புவியின் இசையை
என்னில் கண்டேன் இயல்பாய் கேட்டேன்
இறையை உணர்ந்தேன் இன்பம் அடைந்தேன்

No comments: