Sunday, May 4, 2008

மே தினம்

மே தினம் மேன்மையான தினம்
மேலான சிந்தனை கொண்ட
மேலோர் தினம் எனலாம்
மேலோர் என்பவர் யாவரெனில்
தான் படைத்த தெல்லாம்
தன தென்றே கொள்ளாமல்
இம் மேதினி எல்லாம்
பயனுற உழைபவரெணலாம்!

உழைப்பு என்பது யாதெனில்
ஊனுருக உள்ளே உயிர் உருக
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்த கரத்தாலும் கருத்தாலும்
படைக்கும் செயலே உழைபதுவாகும்
படைப்பு என்பது யாதெனில்
இயற்கையின் கொடையை எளிதாய்
எல்லோரும் பெறவே அளிப்பதுவாகும்

No comments: