இடது சக்தி என்றால்
வலது சிவன் தானே;
இடதும் வலதும் இணைந்தால்
சீவன் தோன்றும் எனலாம்!
சிவனோடு சக்தி சேர்ந்தால்
சிவன் சீவன் என்றாகிறது;
சீவன் என்றால் அறிவு;
அறிவு என்பது சுழுமுனையாகும் !
இடம் வலம் சுழுமுனை
இவை மூன்றும் சரியாய்
இருந்தால் தோன்றும் தன்னுணர்வு;
தன்னை தன்னில் அறிவதேநலம்!
தன்னை அறிவது ;தலைவனை
அறிவது;தலைவனை அறிவது
தன்னுள் தானடங்கி விளங்கும்
இறையை அறிவதேநலம்!
Thursday, November 27, 2008
உறவும் நட்பும் !
உறவினும் உயர்ந்தது நட்பு ;அந்த
நட்பினும் உயர்ந்தது ஒன்றில்லை
ஒன்றுக்குள் ஒன்றாவது நட்பு ;
ஒன்றை ஒன்று பினப்பது உறவு !
உறவென்றால் பிரிவும் உண்டு ;
பிரிவென்றால் துயரமும் உண்டு;
பிரிவும் துயரமும் நட்புக்கு இல்லை ;
இணைவது நட்பு பிரிவது உறவு;
பெற்றுகொடுப்பது உறவின் இயல்பு ;
விட்டுகொடுப்பது நட்பின் சிறப்பு;
பெற்றதை கொடுப்பது நட்பின் உயர்வு ;
உற்றதை உணர்வதே உறவின் சிறப்பு;
குசேலன் பெற்றதும் நட்பின் வழியே ;
சுந்தரன் கற்றதும் நட்பின் மொழியே;
கர்ணன் உற்றதும் நட்பின் உயர்வே;
கற்றதும் பெற்றதும் உற்ற நட்பின் சிறப்பே!
நட்பினும் உயர்ந்தது ஒன்றில்லை
ஒன்றுக்குள் ஒன்றாவது நட்பு ;
ஒன்றை ஒன்று பினப்பது உறவு !
உறவென்றால் பிரிவும் உண்டு ;
பிரிவென்றால் துயரமும் உண்டு;
பிரிவும் துயரமும் நட்புக்கு இல்லை ;
இணைவது நட்பு பிரிவது உறவு;
பெற்றுகொடுப்பது உறவின் இயல்பு ;
விட்டுகொடுப்பது நட்பின் சிறப்பு;
பெற்றதை கொடுப்பது நட்பின் உயர்வு ;
உற்றதை உணர்வதே உறவின் சிறப்பு;
குசேலன் பெற்றதும் நட்பின் வழியே ;
சுந்தரன் கற்றதும் நட்பின் மொழியே;
கர்ணன் உற்றதும் நட்பின் உயர்வே;
கற்றதும் பெற்றதும் உற்ற நட்பின் சிறப்பே!
Wednesday, November 26, 2008
பிறப்பும் இறப்பும் !
பிறப்பும் இறப்பும் புதிர் என்பார் புரியாதோர்;
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள,
பிறப்பே இறப்பின் மறு வடிவம் என்றாகும் ;
பிறப்பின் சிறப்பே இறப்பென்று விளங்கும் !
விதை அழிந்தால் செடி முளைக்கும் ;
இலை யுதிர்ந்தால் பூ பூக்கும் ;
பூவினுக்குள்ளே காய் இருக்கும்;
காய் அழுகிட கனி யாகும் ;
நிகழ்ந்ததை மறந்து நிகழ்தலில் மகிழ்வோம் ;
மகிழ்தலும் புகழ்தலும் இயல்பென்றிருப்போம்;
இயல்பே இறைஎன்ற உண்மையை உணர்வோம்;
உணர்வே உண்மையென்ற தன்மையை பெறுவோம்;
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள,
பிறப்பே இறப்பின் மறு வடிவம் என்றாகும் ;
பிறப்பின் சிறப்பே இறப்பென்று விளங்கும் !
விதை அழிந்தால் செடி முளைக்கும் ;
இலை யுதிர்ந்தால் பூ பூக்கும் ;
பூவினுக்குள்ளே காய் இருக்கும்;
காய் அழுகிட கனி யாகும் ;
நிகழ்ந்ததை மறந்து நிகழ்தலில் மகிழ்வோம் ;
மகிழ்தலும் புகழ்தலும் இயல்பென்றிருப்போம்;
இயல்பே இறைஎன்ற உண்மையை உணர்வோம்;
உணர்வே உண்மையென்ற தன்மையை பெறுவோம்;
தவம்
தவறென்று நினைத்த தெல்லாம்
சரியாக மலர்ந்தது ; நாம்
சரிஎன்று கணித்த தெல்லாம்
தவறாக மாறி விளைந்தது !
தவறெல்லாம் சரியானது; சரிஎல்லாம்
தவறானது ; தவறென்றும் சரிஎன்றும்
சரியாக கணிப்பதற்கு முறையான
தவம் முழுதாக வேண்டும் !
எளிதென்று நினைத்த தெல்லாம்
அரிதானது ; அரிதென்று மலைத்த
தெல்லாம் எளிதானது ;எளியது
அரிதானது ; அரியது எளிதானது !
எளியதும் அரியதும் புலன்கள்
அறியா புதிரானது ; புரியாத்
புதிரெல்லாம் புலனாவதற்கு
முறையான தவம் முழுதாக வேண்டும் !
உறவென்று நினைத்த தெல்லாம்
பகையானது ;பகைஎன்று வெறுத்த
தெல்லாம் உறவானது ; உறவு
பகையானது ;பகை உறவானது ;
உறவும் பகையும் உணர்வானது;
உறவும் பகையும் வாழ்வில்
சரியாய் உணர , முறையான
தவம் முழுதாக வேண்டும்!
சரியாக மலர்ந்தது ; நாம்
சரிஎன்று கணித்த தெல்லாம்
தவறாக மாறி விளைந்தது !
தவறெல்லாம் சரியானது; சரிஎல்லாம்
தவறானது ; தவறென்றும் சரிஎன்றும்
சரியாக கணிப்பதற்கு முறையான
தவம் முழுதாக வேண்டும் !
எளிதென்று நினைத்த தெல்லாம்
அரிதானது ; அரிதென்று மலைத்த
தெல்லாம் எளிதானது ;எளியது
அரிதானது ; அரியது எளிதானது !
எளியதும் அரியதும் புலன்கள்
அறியா புதிரானது ; புரியாத்
புதிரெல்லாம் புலனாவதற்கு
முறையான தவம் முழுதாக வேண்டும் !
உறவென்று நினைத்த தெல்லாம்
பகையானது ;பகைஎன்று வெறுத்த
தெல்லாம் உறவானது ; உறவு
பகையானது ;பகை உறவானது ;
உறவும் பகையும் உணர்வானது;
உறவும் பகையும் வாழ்வில்
சரியாய் உணர , முறையான
தவம் முழுதாக வேண்டும்!
Subscribe to:
Posts (Atom)