உண்ணும் போது உன்னை நினைத்தேன்
உணவின் பயனாய் உடலானை
என்னும் போதும் உன்னை நினைத்தேன்
எண்ணிய பயனாய் அறிவானாய்
பருகும் போது உன்னை நினைத்தேன்
நீரின் பயனாய் உயிரானாய்
துயிலும் போது உன்னை நினைத்தேன்
துயின்ற நிலையிலும் உணர்வானாய்
உடலும் அறிவும் உயிருடன் கலந்த
உன்னத நிலையில் என்னை கண்டேன்
இறையுணர்வென்ற உண்மை உணர்ந்தேன்
நிறைநிலை என்ற திருவருள் பெற்றேன்
கண்ணில் காணாத செவியில் கேளாத
விண்ணின் ஒளியை புவியின் இசையை
என்னில் கண்டேன் இயல்பாய் கேட்டேன்
இறையை உணர்ந்தேன் இன்பம் அடைந்தேன்
Thursday, May 22, 2008
Sunday, May 4, 2008
மே தினம்
மே தினம் மேன்மையான தினம்
மேலான சிந்தனை கொண்ட
மேலோர் தினம் எனலாம்
மேலோர் என்பவர் யாவரெனில்
தான் படைத்த தெல்லாம்
தன தென்றே கொள்ளாமல்
இம் மேதினி எல்லாம்
பயனுற உழைபவரெணலாம்!
உழைப்பு என்பது யாதெனில்
ஊனுருக உள்ளே உயிர் உருக
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்த கரத்தாலும் கருத்தாலும்
படைக்கும் செயலே உழைபதுவாகும்
படைப்பு என்பது யாதெனில்
இயற்கையின் கொடையை எளிதாய்
எல்லோரும் பெறவே அளிப்பதுவாகும்
மேலான சிந்தனை கொண்ட
மேலோர் தினம் எனலாம்
மேலோர் என்பவர் யாவரெனில்
தான் படைத்த தெல்லாம்
தன தென்றே கொள்ளாமல்
இம் மேதினி எல்லாம்
பயனுற உழைபவரெணலாம்!
உழைப்பு என்பது யாதெனில்
ஊனுருக உள்ளே உயிர் உருக
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்த கரத்தாலும் கருத்தாலும்
படைக்கும் செயலே உழைபதுவாகும்
படைப்பு என்பது யாதெனில்
இயற்கையின் கொடையை எளிதாய்
எல்லோரும் பெறவே அளிப்பதுவாகும்
இறையின்பம்
நிகழ்தலும் நிகழத்துதலும் நீயன்றோ நினை
புகழ்தலும் புணர்தலும் என் இயல்பன்றோ
உண்மையும் உணர்வும் நீயன்றோ நின்
உறவும் உரிமையும் என் தவமன்றோ
உண்மை என்று எதனை சொல்வேன்
உரிமை என்று எதனை கொள்வேன்
உறவு என்று எதனை உணர்வேன்
துறவு என்று எதனை துறப்பேன்
உண்மை என்பது துறவின் விழி
உரிமை என்பது உணர்வின் வழி
உறவு என்பது உறவின் மொழி
விழிவழி மொழிவது இறையின்பம்
புகழ்தலும் புணர்தலும் என் இயல்பன்றோ
உண்மையும் உணர்வும் நீயன்றோ நின்
உறவும் உரிமையும் என் தவமன்றோ
உண்மை என்று எதனை சொல்வேன்
உரிமை என்று எதனை கொள்வேன்
உறவு என்று எதனை உணர்வேன்
துறவு என்று எதனை துறப்பேன்
உண்மை என்பது துறவின் விழி
உரிமை என்பது உணர்வின் வழி
உறவு என்பது உறவின் மொழி
விழிவழி மொழிவது இறையின்பம்
Subscribe to:
Posts (Atom)