ஒரு நாள் என்னை உற்றுபார்த்தேன்
மறு நாள் மீண்டும் தொடர்ந்து பார்த்தேன்
மனமும் உடலும் மயங்கிய நிலையில்
செத்த உடலை சட்டென பார்த்தேன் !
கற்றதை எல்லாம் மறந்து பார்த்தேன்
புத்தகம் போல பிரித்து பார்த்தேன்
சித்தகம் புகுந்து சிந்தனை இழந்தேன்
வித்தகம் விளைந்தது விந்தைகள் பிறந்தது
எனது என்று நினைத்ததை எல்லாம்
தனது என்று யார்யாரோ சொன்னார்
நினைவென்று நினைத்தது எல்லாம்
கனவாய் முடிந்தது கதையாய் விளைந்தது!
பு.செ.மணிவண்ணன்
Monday, November 14, 2011
Subscribe to:
Posts (Atom)